மறுக்கிறார் பன்னீர்செல்வம்
சென்னை:
நடக்காத ஒரு சம்பவத்தை நடந்தது போல திமுகவும், அதன் ஆதரவு தொலைக்காட்சியான சன் டிவியும் கூறி வருவதாகபொதுப்பணித்துறை அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், மதிமுக வேட்பாளர் ரவிச்சந்திரனின் சொந்த ஊரான சிப்பிப்பாறையில்,அதிமுக வேட்பாளர் கண்ணனை மதிமுகவினர் முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்துவதாக அமைச்சர் இன்பத் தமிழனுக்குதகவல் கிடைத்தது.
இதையடுத்து அவர் கட்சியினருடன் அங்கு விரைந்தார். அங்கு போய் விட்டுத் திரும்புகையில், வெங்கடாச்சலபுரம் என்றஇடத்தில் ரவிச்சந்திரனின் காரை இன்பத் தமிழனின் கார் முந்திச் சென்றது.
அப்போது ரவிச்சந்திரனின் கார் மீது லேசாக உராய்ந்தது. இதில் காருக்கு லேசான சேதமும், டிரைவருக்கு லேசான காயமும்ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து மதிமுக தொண்டர்கள் இன்பத் தமிழனின் காரை துரத்தியுள்ளனர். பயங்கர ஆயுதங்களால் அவரைத் தாக்கவும்முயன்றுள்ளனர். நிலைமை விபரீதமாக போவதை உணர்ந்த அமைச்சரின் பாதுகாவலர் தனது துப்பாக்கியால் வானத்தை நோக்கிசுட்டு நிலைமையை சமாளித்துள்ளார்.
இதை திரித்து இன்பத்தமிழனுக்கு எதிராக செய்தி பரப்புவது கண்டனத்துக்குரியது என்று கூறியுள்ளார் ஓ.பி.