இன்று மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை
டெல்லி:
தமிழகம் உள்பட நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடக்கிறது.
காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும். அனைத்து மாநிலங்களிலும் மின்னணுஎந்திரங்கள் மூலம் ஓட்டுப் பதிவு நடந்ததால் வாக்கு எண்ணிக்கையும் மிக வேகமாக நடந்துமுடிந்துவிடும்.
10 மணிக்கு முன்னதாகவே பெரும்பாலான தொகுதிகளில் முன்னணி நிலவரம், வெற்றி-தோல்விநிலவரம் தெரிந்துவிடும். முடிவுகள் மாலை 4 மணிக்குள் வெளியாகிவிடும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.
கர்நாடகம், சிக்கிம், ஒரிஸ்ஸா மாநில சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையும் இன்றுநடக்கிறது.
தமிழகத்தில் 39 தொகுதிகளின் வாக்குகள் 44 மையங்களில் எண்ணப்படுகின்றன. நாடு முழுவதும்539 (4 தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது) தொகுதிகளின் வாக்குகளைஎண்ண 1,200 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
காலை 8 மணி முதல் தட்ஸ்தமிழ்.காம் மக்களவைத் தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் வழங்கும்.












Click it and Unblock the Notifications