For Daily Alerts
Just In
ஊட்டி: 22ம் தேதி மலர் கண்காட்சி - கவர்னர் துவக்கி வைக்கிறார்
ஊட்டி:
ஊட்டி மலர் கண்காட்சியை கவர்னர் ராமமோகன் ராவ் வருகிற 22ம் தேதி தொடங்கி வைக்கிறார்.
இது தொடர்பாக நீலகிரி மாவட்ட கலெக்டர் செல்லமுத்து நிருபர்களிடம் கூறியதாவது:
ஊட்டி அரசினர் தாவரவியல் பூங்காவில் வருகிற 22, 23 ஆகிய தேதிகளில் மலர் கண்காட்சி நடக்கிறது. மலர் கண்காட்சியை கவர்னர் ராமமோகன் ராவ் தொடங்கி வைக்கிறார். 2-3ம் தேதி பரிசளிப்பு விழா நடக்கிறது என்றுகூறினார்.
ஊட்டியில் குளுமையான சீதோஷ்ண நிலை நிலவுவதால் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.
இதற்கிடையே மழை காரணமாக பாதிக்கப்பட்ட மேட்டுப்பாளையம் -குன்னூர் ரயில் பாதையை சீரமைக்கும் பணிஓரிரு தினங்களில் முடிந்து விடும் என்றும், வரும் 15ம் தேதி சோதனை ரயில் ஓட்டம் நடைபெறும் என்றும்கூறப்படுகிறது.
மலர் கண்காட்சிக்கு முன்பாக ரயில் போக்குவரத்தைத் தொடங்க தென்னக ரயில்வே திட்டமிட்டுள்ளதாகத்தெரிகிறது.
Comments
admk vijay chennai astrology surya Ajith Pooja madhavan tamilnadu simran kiran electricity kural jeevajothi art gallery florals jothika amoga
Story first published: Wednesday, May 12, 2004, 5:30 [IST]