For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஊட்டி: 22ம் தேதி மலர் கண்காட்சி - கவர்னர் துவக்கி வைக்கிறார்

By Staff
Google Oneindia Tamil News

ஊட்டி:

ஊட்டி மலர் கண்காட்சியை கவர்னர் ராமமோகன் ராவ் வருகிற 22ம் தேதி தொடங்கி வைக்கிறார்.

இது தொடர்பாக நீலகிரி மாவட்ட கலெக்டர் செல்லமுத்து நிருபர்களிடம் கூறியதாவது:

ஊட்டி அரசினர் தாவரவியல் பூங்காவில் வருகிற 22, 23 ஆகிய தேதிகளில் மலர் கண்காட்சி நடக்கிறது. மலர் கண்காட்சியை கவர்னர் ராமமோகன் ராவ் தொடங்கி வைக்கிறார். 2-3ம் தேதி பரிசளிப்பு விழா நடக்கிறது என்றுகூறினார்.

ஊட்டியில் குளுமையான சீதோஷ்ண நிலை நிலவுவதால் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.

இதற்கிடையே மழை காரணமாக பாதிக்கப்பட்ட மேட்டுப்பாளையம் -குன்னூர் ரயில் பாதையை சீரமைக்கும் பணிஓரிரு தினங்களில் முடிந்து விடும் என்றும், வரும் 15ம் தேதி சோதனை ரயில் ஓட்டம் நடைபெறும் என்றும்கூறப்படுகிறது.

மலர் கண்காட்சிக்கு முன்பாக ரயில் போக்குவரத்தைத் தொடங்க தென்னக ரயில்வே திட்டமிட்டுள்ளதாகத்தெரிகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X