30 வாக்கு சாவடிகளில் அமைதியான மறுவாக்கு பதிவு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழகத்தின் 13 தொகுதிகளில் உள்ள 30 வாக்குச் சாவடிகளில் இன்று அமைதியான முறையில் மறு வாக்குப் பதிவுநடந்தது.

வாக்காளர் பட்டியலில் ஏற்பட்ட குளறுபடிகள், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறுகாரணமாக 40க்கும் மேற்பட்ட வாக்குச் சாவடிகளில் மறு வாக்குப் பதிவு நடத்தப்படவேண்டும் என்று தேர்தல்ஆணையத்திற்கு கோரிக்கைகள் விடுக்கப்பட்டன.

இந்த கோரிக்கையைப் பரிசீலித்த தேர்தல் ஆணையம் கரூர் தொகுதியில் 11 வாக்குச் சாவடிகளிலும், திண்டுக்கல்,தென்காசி, திருச்செந்தூர் ஆகிய தொகுதிகளில் தலா 3 வாக்குச் சாவடிகளிலும், வந்தவாசி தொகுதியில் இரண்டுவாக்குச் சாவடியிலும்,

தென் சென்னை (ஆலந்தூர்), மத்திய சென்னை (புளியந்தோப்பு), திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, திருச்செங்கோடு,நீலகிரி, பழனி, சிவகங்கை ஆகிய தொகுதிகளில் தலா ஒரு வாக்குச் சாவடியிலும் இன்று மறுவாக்குப் பதிவு நடத்தஉத்தரவிட்டது.

இதையடுத்து இன்று காலை 7 மணிக்கு இங்கு மறு வாக்குப் பதிவு தொடங்கியது. மாலை 5 மணிக்கு முடிவடைந்தது.மறு வாக்குப் பதிவுக்காக புதிய வாக்குப் பதிவு இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டன.

மத்திய சென்னையில் வாக்காளர் பட்டியலில் இடம் பெறாத இருவர் ஓட்டுப் போட முயன்றனர். அவர்களைஅதிகாரிகள் அங்கிருந்து வெளியேற்றினர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மற்றபடி, பலத்தபாதுகாப்புடன் அமைதியாக வாக்குப் பதிவு நடந்தது.

மறு வாக்களிக்கும் மக்களின் ஆள்காட்டி விரலுக்குப் பதிலாக நடுவிரலில் மை வைக்கப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+