இன்பத்தமிழன், ரவிச்சந்திரன் மீது வழக்குகள் பதிவு
சாத்தூர்:
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே வெங்கடாசலபுரம் என்ற இடத்தில் நடந்த மோதல் தொடர்பாக அமைச்சர்இன்பத்தமிழன், சிவகாசி தொகுதி மதிமுக வேட்பாளர் சிப்பிப்பாறை ரவிச்சந்திரன் ஆகியோர் மீது சாத்தூர் நகரபோலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
வெங்கடாசலபுரம் அருகே சிப்பிப்பாறை ரவிச்சந்திரனின் காரை வழிமறித்து நிறுத்தி அவர் மீது துப்பாக்கியால்சுட்டதாக இன்பத்தமிழன் மீது புகார் எழுந்துள்ளது. இதேபோல, மதிமுகவினர் இன்பத்தமிழனை சூழ்ந்து கொண்டுதாக்கியதாக அதிகவினர் புகார் கூறியுள்ளனர்.
இதுதொடர்பாக சாத்தூர் நகர காவல் நிலையத்தில்இரு தரப்பினரும் புகார் கொடுத்துள்ளனர். இன்பத்தமிழன்கொடுத்த புகாரின் பேரில் சிவகாசி மதிமுக வேட்பாளர் ரவிச்சந்திரன், வெங்கடாசலபுரம் பஞ்சாயத்து தலைவர்திருவேங்கடசாமி ஆகியோர் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதேபோல ரவிச்சந்திரன் சார்பில் சந்திரசேகரன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில், இன்பத்தமிழன்உள்ளிட்டோர் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் திமுக, அதிமுக, மதிமுகவினர் மோதும் சூழ்நிலை உள்ளதால்,பதற்றமான பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சாத்தூர், வெங்கடாசலபுரம், மேட்டமலை,முக்குராந்தல் உள்ளிட்ட பகுதிகளில் துப்பாக்கி ஏந்திய போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications