இன்பத்தமிழனை கைது செய்ய தாமரைக்கனி கோரிக்கை
ஸ்ரீவில்லிபுத்தூர்:
சிவகாசி தொகுதி மதிமுக வேட்பாளர் சிப்பிப்பாறை ரவிச்சந்திரன் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி வன்முறையில்ஈடுபட்ட அமைச்சர் இன்பத்தமிழனை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்றுஇன்பத்தமிழனின் தந்தையும், முன்னாள் எம்.எல்.ஏ.வும், ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சித் தலைவருமான தாமரைக்கனிகோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக தாமரைக்கனி செய்தியாளர்களிடம் பேசுகையில்,
இன்பத்தமிழனை உடனடியாக அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும். அவரை குண்டர் தடுப்புச் சட்டத்தில்கைது செய்ய வேண்டும்.
அமைச்சராக இருந்து கொண்டு வன்முறேையில் ஈடுபட்டு, அந்தப் பதவிக்கே பெரும் களங்கத்தை ஏற்படுத்திவிட்டார் இன்பத்தமிழன். அவர் இனியும் பதவியில் நீடிக்கக் கூடாது.
இன்பத்தமிழனின் நடவடிக்கைகளை மிகவும் கவனமாக கண்காணிக்குமாறு தேர்தல் ஆணையத்தை நான்ஏற்கனவே கேட்டுக் கொண்டிருந்தன்ே. அவர்கள் அலட்சியமாக இருந்ததால் இன்று மதிமுக வேட்பாளரின்உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு விட்டது என்றார் அவர்.












Click it and Unblock the Notifications