தமிழகம் பீகாராக மாறி வருகிறது: வைகோ

Subscribe to Oneindia Tamil

விருதுநகர்:

தமிழகம் பீகாராக மாறி வருவதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.

விருதுநகரில் திமுக நகரச் செயலாளர் ராஜாக்கனியின் வீடு தாக்கப்பட்டதையடுத்து அங்கு சென்ற வைகோராஜாக்கனியின் குடும்பத்தினரிடம் நடந்த சம்பவத்தைக் கேட்டறிந்தார்.

இதன் பின் நிருபர்களிடம் பேசிய வைகோ, சிவகாசி தொகுதி மதிமுக வேட்பாளர் சிப்பிப்பாறை ரவிச்சந்திரனைக்கொன்றுவிட்டு மறு தேர்தல் நடத்தும் திட்டத்துடன் தான் அவர் மீது துப்பாக்கியால் சுட்டிருக்கிறார் அமைச்சர்இன்பத்தமிழன்.

தோல்வி பயத்தால், தனது அமைச்சர் பதவியைக் காப்பாற்றிக் கொள்ள இந்த வேலையை அவர் செய்துள்ளார்.ஆனால், நடந்த சம்பவத்தை அப்படியே திரித்து போலீசாரிடம் கூறியிருக்கிறார். அவர்களும் அமைச்சர்சொன்னபடியே வழக்கைப் பதிவு செய்துள்ளனர்.

ரவிச்சந்திரன் அமைதியான சுபாவம் கொண்டவர், தன் மீதான தாக்குதலின்போதும் கூட அளவுக்கு மிஞ்சியபொறுமை காட்டியுள்ளார். தகாத வார்த்தைகளைப் பேசக்கூடிய நபர் அல்ல அவர்.

கடந்த கால மோதல்களில் இருந்து விடுபட்டு விருதுநகர் அமைதியாக இருக்கும் சூழலில் அமைதியைக் குலைக்கஇந்த முயற்சி நடந்துள்ளது. நாங்களும் கூட்டணிக் கட்சியினரும் பொறுமை காட்டியதால் நடக்க இருந்த விபரீதம்தவிர்க்கப்பட்டுள்ளது.

தேர்தல் தினத்தன்று என்னையும் கூட சிவகாசியில் வைத்து தாக்க திட்டமிட்டிருந்தனர். சாத்தூர் ராமச்சந்திரனின்தியேட்டர் மீது பெட்ரோல் குண்டு வீசியிருக்கின்றனர். திமுகவினரின் வீடுகளைத் தாக்கியுள்ளனர்.

இந்த ஆட்சியில் தமிழகம் பீகாராக மாறி வருகிறது. அமைச்சர் சுட்டார் என்பதற்கு கிராம மக்களே சாட்சி.வானத்தை நோக்கி சுட்டிருந்தால் தரையில் இருக்கும் காரில் எப்படி குண்டு பாய்ந்திருக்கும்? ரவிச்சந்திரனின் கார்என்ன பறக்கும் காரா? என்று கேட்டார் வைகோ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+