கர்நாடகத்தில் தொங்கு சட்டசபை: கிருஷ்ணா ராஜினாமா
பெங்களூர்:
காங்கிரஸ் கட்சி தேசிய அளவில் ஆச்சரியமான வெற்றியைப் பெற்றாலும் கர்நாடகத்தில் அக் கட்சிதோல்வியடைந்துள்ளது. இதையடுத்து முதல்வர் கிருஷ்ணா இன்று தனது பதவியை ராஜினாமாசெய்தார்.
அம் மாநிலத்தில் மக்களவைத் தேர்தலிலும் சட்டமன்றத் தேர்தலிலும் பா.ஜ.க முன்னிலையில்உள்ளது. இரண்டாவது இடத்தில் காங்கிரசும், தேவெ கெளடாவின் மதசார்பற்ற ஜனதா தளம்மூன்றாவது இடத்திலும் உள்ளன.
மொத்தம் 224 உறுப்பினர்கள் கொண்ட சட்டசபையில் ஆட்சி அமைக்க 112 இடங்கள் தேவை.ஆனால், இதுவரை முடிவு அறிவிக்கப்பட்ட 194 இடங்களில் பா.ஜ.க 77 இடங்களிலும் காங்கிரஸ்56, கெளடாவின் கட்சி 52 இடங்களிலும் வென்றுள்ளன. மீதியுள்ள இடங்களை சுயேச்சைகள், சிறியகட்சிகள் பிடித்துள்ளன.
இதனால் அங்கு யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காத சூழல் உருவாகியுள்ளது. இதனால் காங்கிரசும்கெளடாவும் இணைந்து ஆட்சியை அமைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
கர்நாடகத்தில் மக்களவைத் தேர்தலில் பாஜக பெரும் வெற்றி பெற்றுள்ளது. மொத்தமுள்ள 28இடங்களில் 17ல் பாஜகவும் இரு இடங்களில் காங்கிரசும் வென்றுள்ளன.












Click it and Unblock the Notifications