ஜெவின் ஆணவத்துக்கு கிடைத்த தோல்வி: கருணாநிதி
சென்னை:
நாடு முழுவதும் நிலவும் எதிர்ப்பலையைத் தான் தமிழக மக்களும் பிரதிபலித்திருக்கிறார்கள் எனதிமுக தலைவர் கருணாநிதி கூறினார்.
பாண்டிச்சேரி உள்பட 40 இடங்களிலும் திமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றுள்ள நிலையில்அது குறித்து கருத்து தெரிவித்த கருணாநிதி, தமிழகத்தில் ஜெயலலிதா அரசின் ஆணவனத்துக்குபெரும் பாடம் புகட்டியுள்ளார்கள் மக்கள்.
மக்களவையில் தமிழக மக்களின் நலனுக்காக திமுக தொடர்ந்து குரல் கொடுக்கும். பலமான கூட்டணிஅமைந்ததும், கூட்டணிக் கட்சியினர் மிக ஒற்றுமையோடு போராடியதும் தான் வெற்றிக்கு முக்கியக்காரணம் என்றார்.
இந்த வெற்றியை திமுக, மதிமுக,. பா.ம.க., காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சித் தொண்டர்கள் மாநிலம்முழுவதும் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.
காலையில் முடிவுகளை அறிய சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வந்ததொண்டர்கள், கட்சியின் தோல்விச் செய்தியைக் கேட்டதும் அமைதியாக கலைந்து சென்றுவிட்டனர்.
திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் பெரும் திரளான தொண்டர்கள் கூடி நின்றுஉற்சாக கோஷமிட்டபடி சுற்றி வந்து கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications