பாஜகவை கவிழ்த்த கூட்டணி கட்சிகள்
பெங்களூர்:
காங்கிரசை விட 0.12 சதவீதம் அதிக வாக்குகளை வென்றாலும், கூட்டணிக் கட்சிகள் படுதோல்வி அடைந்ததால்பா.ஜ.கவால் அதிக இடங்களைப் பிடிக்க முடியாமல் போய்விட்டது.
அதே நேரத்தில் கடந்த மக்களவைத் தேர்தலைவிட 1.5 சதவீதம் குறைவாக வாக்குகளையே பெற்றுள்ளகாங்கிரசால் கூட்டணிக் கட்சிகளின் உதவியால் அதிக இடங்களைப் பிடிக்க முடிந்துள்ளது.
இந்தத் தேர்தலில் காங்கிரஸ் தனிப்பட்ட முறையில் 35.19 சதவீத ஓட்டுக்களையும், பா.ஜ.க 35.31 சதவீதவாக்குகளையும் வென்றுள்ளது. பாஜகவுக்கு கடந்த தேர்தலை விட இந்த இம்முறை 1.68 சதவீத வாக்குகள்குறைவாகவே கிடைத்துள்ளன
இதனால் காங்கிரஸ் தனியாக 145 இடங்களை வென்றுள்ள நிலையில் பா.ஜ.கவால் 137 இடங்களை மட்டுமேபிடிக்க முடிந்துள்ளது. காங்கிரசுக்கு கடந்த தேர்தலைவிட ஒரு சீட் அதிகம் கிடைத்துள்ளது. பாஜகவோ 44இடங்களை இழந்துள்ளது.
இந்தத் தேர்தலில் அதிக இடங்களை வென்ற கட்சி என்ற நிலையை காங்கிரஸ் அடைந்துள்ளது.
காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகளான ராஷ்ட்ரீய ஜனதா தளம், லோக் ஜன் சக்தி ஆகியவை பீகாரிலும், திமுக, மதிமுக,பா.ம.க. ஆகிய கட்சிகள் தமிழகத்திலும், தெலுங்கான ராஷ்ட்ரீய சமிதி ஆந்திரத்திலும் பெரும் வெற்றிபெற்றுள்ளன.
ஆனால், பா.ஜ.கவின் கூட்டணிக் கட்சிகளான அதிமுக தமிழகத்திலும், தெலுங்கு தேசம் ஆந்திராவிலும், ஐக்கியஜனதா தளம் பீகார் மற்றும் ஜார்க்கண்டிலும், திரிணமூல் காங்கிரஸ் மேற்கு வங்கத்திலும் படுதோல்வியைசந்தித்துள்ளன.
மகாராஷ்டிரத்தில் இதன் கூட்டணிக் கட்சியான சிவசேனாவும் எதிர்பார்த்த இடங்களைப் பிடிக்கவில்லை.
ஹரியாணாவில் பா.ஜ.கவை விட்டு லோக்தளம் விலகியதால் அங்கு 9 இடங்களை பா.ஜ.க. இழந்துள்ளது.குஜராத்தில் 26 இடங்களில் அனைத்தையும் பா.ஜ.கவே வெல்லும் என எதிர்பார்த்த நிலையில் 12 இடங்களைகாங்கிரஸ் வென்றது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதே போல பா.ஜ.கவுக்கு பெரும் தோல்வி ஏற்பட்ட மாநிலம் உத்தரப் பிரதேசம். அங்கு சமாஜ்வாடி, பகுஜன்சமாஜ் கட்சிகளுக்கு அடுத்தபடியாக மூன்றாவது இடைத்தையே பிடித்துள்ள பா.ஜ.கவுக்கு வெறும் 11 இடங்களேகிடைத்துள்ளன.
இங்கு மொத்தம் 80 தொகுதிகள் இருப்பது குறிப்பிடத்தக்கது. இம்முறை 30 இடங்களாவது கிடைக்கும் எனபா.ஜ.க. கருதி கடுமையாக பிரச்சாரம் செய்தது.
அதே போல இமாச்சலப் பிரதேசத்திலும் பா.ஜ.கவுக்கு தோல்வியே கிடைத்துள்ளது.
பா.ஜ.கவை காப்பாற்றிய மாநிலங்கள் கர்நாடகம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் தான். இந்தமூன்று மாநிலங்களிலும் இக் கட்சிக்கு 64 இடங்கள் கிடைத்துள்ளன. இம் மூன்றிலும் காங்கிரஸ் படுதோல்விகண்டுள்ளது.
இது தவிர பஞ்சாபிலும் அக் கட்சிக்கு பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது.
பா.ஜ.க. ஆலோசனை:
தேர்தலில் கட்சிக்கு தேசிய அளவில் ஏற்பட்ட மாபெரும் சரிவு குறித்து இன்று பிரதமர் வாஜ்பாய் தலைமையில்கூடிய பா.ஜ.கவின் நாடாளுமன்ற உயர் மட்டக் குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இதில் அத்வானி,வெங்கையா நாயுடு, பிரமோத் மகாஜன் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.
அதிமுக மீது தாக்கரே பாய்ச்சல்:
தமிழத்திலும் ஆந்திராவிலும் பா.ஜ.கவுக்கு தோல்வி ஏற்பட அதிமுக, தெலுங்கு தேசம் போன்ற மக்களால்நிராகரிக்கப்பட்ட கட்சிகளுடன் கூட்டணி தான் காரணம் என பா.ஜ.க. கூட்டணியில் உள்ள சிவசேனைத் தலைவர்பால்தாக்கரே கூறியுள்ளார்.