ராஜினாமா செய்ய மாட்டேன்: ஜெயலலிதா
சென்னை:
நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுவும் பா.ஜ.கவும் ஒரு இடத்தில் கூட வெல்லாமல் படுதோல்வி அடைந்துள்ள நிலையில்முதல்வர் பதவியை விட்டு நான் விலக வேண்டிய அவசியமில்லை என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.
அதிமுக-பாஜக கூட்டணிக்கு பெரும் தோல்வி கிடைத்ததையடுத்து ஜெயலலிதா பதவி விலக வேண்டும் என்று திமுக, காங்கிரஸ்,பா.ம.க., மதிமுக உள்ளிட்ட கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.
தேர்தல் முடிவுகள் குறித்து நேற்று முழுவதும் எந்தக் கருத்தும் தெரிவிக்காமல் ஆழ்ந்த அமைதி காத்த ஜெயலலிதா நேற்று இரவில்ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் கூறியிருப்பதாவது:
மக்களின் தீர்ப்பை தலைவணங்கி ஏற்கிறேன். தற்போது நடந்துள்ளது நாடாளுமன்றத் தேர்தல். இதில் அதிமுகதோல்வியுற்றுள்ளதால் நான் பதவி விலக வேண்டிய அவசியம் இல்லை. இந்தத் தேர்தல் எனது அரசின் மீதான கருத்துக் கணிப்புஅல்ல.
இதுதான் உண்மை. இதுதான் அரசியலின் அடிப்படையும் கூட. ஆனால் அதைப் புரிந்து கொள்ளாமல் சில கட்சிகள் நான் பதவிவிலக வேண்டும் என்று கூறுவது விந்தையாக உள்ளது.
1999ம் ஆண்டு அதிமுக கூட்டணி 39 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. பாண்டிச்சேரியில் கூட திமுகவால் வெல்ல டியவில்லை.அப்போது கருணாநிதி தான் முதல்வராக இருந்தார். தோல்விக்குப் பொறுப்பேற்று அவர் ராஜினாமா செய்தாரா?
தேர்தல் முடிவு திமுக அரசுக்கு எதிரான கருத்துக் கணிப்பு அல்ல தேர்தல் என்று விளக்கம் அளித்தார். அது எனக்கும் பொருந்தும்.எனது கூட்டணிக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications