இந்தியா ஒளிர்வதாக ஏமாற்றியதால் பாஜக தோற்றது: வாசன்
சென்னை:
ஜனநாயக முற்போக்குக் கூட்டணியில் உள்ள திமுக, பாமக, மதிமுக ஆகியவை மத்திய அமைச்சரவையில் சேர முன் வரவேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், இந்தியா ஒளிர்வதாக மக்களை பா.ஜ.க. ஏமாற்றியது.இதனால்தான் அந்தக் கட்சிக்கு படுதோல்வி கிடைத்துள்ளது.
மத்தியில் காங்கிரஸ் தலைமையில் அமையவுள்ள ஆட்சியில், தமிழகத்தில் ஜனநாயக முற்போக்குக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள திமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் பங்கேற்க வேண்டும். அமைச்சரவையில் இடம் பெற வேண்டும்.
இந்திய நதிகள் அனைத்தையும் இணைக்க வேண்டியது மிகவும் அவசியம். இதை காங்கிரஸ் ஆட்சியின்போது நிறைவேற்றபாடுபடுவோம். கட்சித் தலைமையிடத்திலும் வற்புறுத்துவோம்.
அவர் இன்று இரவு அல்லது நாளை காலை டெல்லி சென்று சோனியா காந்தியை சந்திக்கவுள்ளார்.












Click it and Unblock the Notifications