ஜெ. எதிர்ப்பு அலையே வெற்றிக்குக் காரணம்: ப.சிதம்பரம்
காரைக்குடி:
ஜெயலலிதாவுக்கு எதிராகவும், அதிமுக அரசுக்கு எதிராகவும் மாநிலம் முழுவதும் வீசி வரும் அதிருப்தி அலையே ஜனநாயகமுற்போக்குக் கூட்டணியின் மாபெரும் வெற்றிக்குக் காரணம் என்று சிவகங்கை தொகுதியில் வெற்றி பெற்றுள்ள காங்கிரஸ்ஜனநாயகப் பேரவை பொதுச் செயலாளர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
காரைக்குடியில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தேசிய அளவில் பெரும் அரசியல் மாற்றம் ஏற்பட்டுள்ளதுமகிழ்ச்சியைத் தருகிறது. தமிழகத்தைப் பொருத்தவரை மாநிலம் முழுவதும் ஜெயலலிதாவுக்கு எதிராக கடுமையான அலைவீசியதை நான் பிரசாரத்தின்போதே உணர நேரிட்டது.
அதிமுக இந்த அளவுக்குப் படுதோல்வியைச் சந்திக்கும் என்பதை நான் எதிர்பார்த்தேன். எனது வெற்றிக்கும், ஜனநாயகமுற்போக்குக் கூட்டணியின் பிற வேட்பாளர்களின் வெற்றிக்கும் மிகவும் உறுதுணையாக இருந்த வாக்காளர்கள், அரசுஊழியர்கள், சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications