ஜெ. அரசு உடனே பதவி விலக வேண்டும்: திமுக கூட்டணி
சென்னை:
மக்களவைத் தேர்தலில் மக்களால் நிராகரிக்கப்பட்ட முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசுஉடனடியாக பதவி விலக வேண்டும் ஜனநாயக முற்போக்குக் கூட்டணி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
திமுக தலைவர் கருணாநிதியின் தலைமையில் இன்று நடந்த இக் கூட்டணியின் தலைவர்கள் கூட்டத்தில்நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
தனது அரசால் கொடுமைப்படுத்தப்பட்ட அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் தனக்கு வாக்களிக்க மாட்டார்கள்என்பதால், திட்டமிட்டு அவர்களது பெயர்களை தமிழக அரசு நீக்கியது.
மேலும் பாஜகவால் தங்களுக்கு சிறுபான்மையினரின் வாக்குகளும் கிடைக்காது என்பதால் அவர்களதுபெயர்களும் நீக்கப்பட்டுள்ளன.
இந்த மகா கொடுமையான செயலுக்கும், மக்களால் நிராகரிக்கப்பட்டு, தேர்தலில் கிடைத்த பெரும் தோல்விக்கும்பொறுப்பேற்று ஜெயலலிதா பதவி விலக வேண்டும்.
வாக்காளர் பட்டியலில் பெயர்களை நீக்க அதிமுக அரசுக்கு உடந்தையாக இருந்த வருவாய்த்துறை அதிகாரிகள்மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எங்கள் மீது பெரும் நம்பிக்கை வைத்து மாபெரும் வெற்றி தேடித் தந்த தமிழக மக்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.












Click it and Unblock the Notifications