சோனியா காந்திக்கு ஆற்காடு இளவரசர் வாழ்த்து
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்குக் கிடைத்த வெற்றிக்காக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு, ஆற்காடு இளவரசர்நவாப் முகம்மது அப்துல் அலி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
சென்னையில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வேலைவாய்ப்பு, கல்வி ஆகியவற்றில் மத பாரபட்சம் பார்ப்பதை காங்கிரஸ்அரசு அனுமதிக்கக் கூடாது. நாட்டின் மதச்சார்பின்மை, பாரம்பரியத்தை காங்கிரஸ் அரசு கட்டிக் காக்க வேண்டும்.
சிறுபான்மையினர் சமூகத்தின் பாதுகாப்புக்கு அரசியல் சட்டத்திலேயே இடம் உள்ளது. இருந்தாலும் அதை சரியான முறையில்அமல்படுத்துவதை காங்கிரஸ் தலைமையிலான அரசு உறுதி செய்ய வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications