For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அரசு பஸ்சால் சட்டை கிழிந்தவருக்கு ரூ. 1,610 நஷ்டஈடு!

By Staff
Google Oneindia Tamil News

விருதுநகர்:

அரசு பேருந்தில் நீட்டிக் கொண்டிருந்த கம்பியால் விலை உயர்ந்த சட்டை கிழிந்தவருக்கு ரூ. 1,610 நஷ்டஈடு வழங்க அரசுப்போக்குவரத்துக் கழகத்திற்கு நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரை மேல மாசி வீதி பகுதியைச் சேர்ந்தவர் எஸ்.ஆர்.ராகவன். இவர் மதுரையிலிருந்து விருதுநகருக்கு அரசு பேருந்தில்பயணம் செய்தார். விருதுநகரில் பேருந்திலிருந்து இறங்கினார்.

அப்போது படிக்கட்டின் அருகே நீட்டிக் கொண்டிருந்த கம்பி இவரது சட்டையைப் பதம் பார்த்தது. அதில் அவரது சட்டை கிழிந்துவிட்டது. சட்டையின் விலை ரூ. 860 என்பதால் மனம் வெதும்பினார் ராகவன்.

பேருந்தின் ஓட்டுநடரிம் இப்படி கம்பியை சரி செய்யாமல் விட்டு வைத்ததால் தான் எனது சட்டை கிழிந்து போய் விட்டது. இதற்குஎன்ன பதில் சொல்கிறீர்கள் என்று கோபமாக கேட்டுள்ளார். ஆனால் அவரை ஓட்டுநர் கண்டு கொள்ளவில்லை. அதேபோல,போக்குவரத்துக் கழக அதிகாரிகளிடம் முறையிட்டும் பதில் கிடைக்கவில்லை.

இதைத் தொடர்ந்து ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட நுகர்வோர் குறை தீர்ப்பு மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் ராகவன்.வழக்கை விசாரித்த குறை தீர்ப்பு மன்றம், பணியில் அலட்சியம் காட்டிய போக்குவரத்துக் கழக நிர்வாகத்தைக் கண்டித்ததோடுராகவனுக்கு ஏற்பட்ட நஷ்டத்திற்கு ஈடாக ரூ. 1,610 இழப்பீட்டுத் தொகையாக வழங்க வேண்டும் என்றும் போக்குவரத்துக்கழகத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X