சோனியா பிரதமராக வைகோ ஆதரவு: அமைச்சரவையில் சேர மாட்டோம் என அறிவிப்பு
சென்னை:
மத்தியில் அமையும் காங்கிரஸ் ஆட்சியை மதிமுக வெளியில் இருந்து ஆதரிக்கும் என வைகோஅறிவித்துள்ளார். கூட்டணியில் இருந்தாலும் மத்திய அமைச்சரவையில் சேர மாட்டோம் என அவர்திட்டவட்டமாக அறிவித்தார்
மதிமுகவின் உயர் நிலைக் குழுக் கூட்டத்தின் முடிவில் இந்த முடிவை அக் கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ அறிவித்தார்.
அவர் கூறியதாவது:
நாடாளுமன்றத்தில் ஆளும் கூட்டணி வரிசையில் அமர்வோம். ஆனால், அமைச்சரவையில் மதிமுகசேராது. ஆட்சிக்கு வரும் புதிய அரசு பொடா சட்டத்தை உடனடியாக நீக்கும் என நம்புகிறேன்.
சோனியா காந்தி பிரதமராவதை மதிமுக வரவேற்கிறது. அதில் எங்களுக்கு எந்தக் கருத்துவேறுபாடும் இல்லை.
கூட்டணி ஆட்சி நடத்துவதற்காக குறைந்தபட்ச செயல் திட்டத்தை காங்கிரஸ் உருவாக்கி வருகிறது.அதில் மதிமுகவின் கருத்துக்களையும் இடம் பெறச் செய்யும் வகையில் எங்களது தேர்தல்அறிக்கையை அனுப்பி வைப்போம் என்றார் வைகோ.
மதிமுகவுக்கு எல்.கணேசன், செஞ்சி ராமச்சந்திரன், டாக்டர் கிருஷ்ணன், சிப்பிப்பாறை ரவிச்சந்திரன்ஆகிய 4 எம்.பிக்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications