சென்னை விருந்தினர் இல்லத்தில் இறந்து கிடந்த உச்ச நீதிமன்ற நீதிபதியின் மகன்
சென்னை:
சென்னை அரசினர் விருந்தினர் மாளிகையில் உச்ச நீதிமன்ற நீதிபதியின் மகன் மர்மமான முறையில் இறந்துகிடந்தார்.
நீதிபதி பி.என். அகர்லாவின் மகனான அஜீஷ் அகர்வால் (33) நேற்றிரவு சென்னை வந்தார். கண் மருத்துவப்படிப்பு பயின்று வந்த அவர் பிராக்டிகல் தேர்வுக்காக சென்னைக்கு வந்தார்.
தமிழக அரசு விருந்தினர் இல்லத்தி தங்கிய அவர், இரவு சாப்பிட வெளியே சென்றிவிட்டுத் திரும்பி வந்து தனதுஅறைக்குள் சென்றார்.
இன்று காலை அவரது அறைக் கதவு நெடு நேரம் திறக்கப்படாததால், விருந்தினர் இல்ல ஊழியர்கள் கதவைபலமாகத் தட்டிப் பார்த்தனர்.
அப்போதும் திறக்கப்படாததால் போலீசுக்கு தகவல் தந்தனர். போலீசார் கதவை உடைத்துச் சென்று பார்த்து அஜீஷ்மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
அவருக்கு அருகே ரசாயனம் அடங்கிய பாட்டிலும் சில மாத்திரைகளும் இருந்தன. அவற்றை சாப்பிட்டு அஜூஷ்தற்கொலை செய்து கொண்டிருக்க வேண்டும் என போலீசார் கருதுகின்றனர்.












Click it and Unblock the Notifications