அரசில் பங்கேற்பதா?: முடிவெடுப்பதில் மார்க்சிஸ்ட் திணறல்
டெல்லி:
காங்கிரஸ் அரசில் பங்கேற்பதா அல்லது வெளியில் இருந்து ஆதரவு தருவதா என்பதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சியில் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை.
தலைவர்களுக்குள் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளதால் இதுவரை முடிவேதும் எடுக்கப்படவில்லை. தொடர்ந்துஆலோசனைகள் நடந்து வருகின்றன.
சோனியா காந்தி தலைமையில் ஆட்சியமைய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தான் தீவிரமான முயற்சிகளை எடுத்துஅதில் வெற்றியும் பெற்றுள்ளது.
ஆனால், அரசில் இணைந்து அமைச்சரவையில் பங்கேற்கலாமா வேண்டாமா என்பதில் அக் கட்சியின் மூத்ததலைவர்களுக்குள் கருத்து வேறுபாடுகள் தொடர்ந்து கொண்டுள்ளன.
கடந்த இரு தினங்களாக நடந்து வரும் அக் கட்சியின் மூத்த தலைவர்களின் ஆலோசனைகள் இன்றும் தொடர்ந்துகொண்டுள்ளன.
கூட்டத்தில் இருந்து வெளியே வந்த மூத்த தலைவர் ஜோதிபாசு, இன்னும் முடிவு எட்டப்படவில்லை என்றுகூறிவிட்டுச் சென்றார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அரசில் பங்கேற்கத் தயாராக இருப்பதாகக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications