சோனியா பிரதமரா?: பதவி விலகுகிறார் சுஷ்மா
டெல்லி:
வெளிநாட்டுக்காரரான சோனியாவை பிரதமராக ஏற்க முடியாது என்று கூறியுள்ள பா.ஜ.க. மூத்த தலைவரானசுஷ்மா சுவராஜ் தனது ராஜ்யசபா எம்.பி. பதவியை ராஜினாமா செய்யப் போவதாக அறிவித்துள்ளார்.
அவரது கணவர் சுவராஜும் தனது ராஜ்யசபா எம்.பி. பதவியில் இருந்து விலகுகிறார்.
அரசியலில் காலடி வைத்து கர்நாடக மாநிலம் பெல்லாரி தொகுதியில் சோனியா காந்தி போட்டியிட்டபோது,அவரை எதிர்த்து பா.ஜ.க. சார்பில் நிறுத்தப்பட்டவர் சுஷ்மா. அப்போது வெளிநாட்டுக்காரரான சோனியாவுக்குவாக்களிக்காதீர்கள் என பிரச்சாரம் செய்தார் சுஷ்மா.
அந்தத் தேர்தலில் சோனியா வென்றார். ஆனாலும் சோனியாவை சுஷ்மா படு தீவிரமாக எதிர்த்து வருகிறார்.
இந் நிலையில் சோனியா பிரதமராகப் பதவியேற்கப் போவதையடுத்து தானும் தனது கணவரும் எம்.பி பதவிகளைராஜினாமா செய்யப் போவதாகவும், ராஜ்யசபையில் அமர்ந்து கொண்டு தன்னால் சோனியா பிரதமர் என அழைக்கமுடியாது என்றும் சுஷ்மா தெரிவித்தார்.
சோனியா பிரதமராக இருக்கும் வரை நாடாளுமன்ற வாசலையே மிதிக்கப் போவதில்லை என்றும் சுஷ்மா சுவராஜ்தெரிவித்துள்ளார்.