சென்னையில் வேகமாய் பரவுகிறது காலரா: 2 பேர் சாவு- 200 பேர் மருத்துவமனையில் அனுமதி
சென்னை:
வட சென்னை பகுதியில் காலரா நோய் வேகமாக பரவி வருகிறது. இதைத் தடுக்க வீடு வீடாக குளோரின்மாத்திரைகள் கொடுக்கப்பட்டு வருகின்றன.
அண்மையில் பெய்த மழையால் தேங்கிய அசுத்தமான நீர் குடிநீர் குழாய்களில் நுழைந்துவிட்டதால் காலாராபரவியதாகத் தெரிகிறது. நோய்க்கு இதுவரை 2 பேர் பலியாகியுள்ளனர். 200க்கும் மேற்பட்டோர்தண்டையார்பேட்டை தொற்று நோய் தடுப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பலர்அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
பட்டாளம் பகுதியைச் சேர்ந்த தனலெட்சுமி (40), ஓட்டேரியைச் சேர்ந்த அழகேசன் (23) ஆகிய இருவரும் காலராநோய்க்கு பலியானவர்கள்.
காலரா நோய் மேலும் பரவாமல் தடுக்க சுகாதாரத் துறை தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளது. சென்னைமாநகராட்சியின் சுகாதாரப் பிரிவு, சென்னை பெருநகர குடிநீர் வினியோக வாரியம் ஆகியவை இணைந்துகுளோரின் மாத்திரைகள் உள்ளிட்ட தடுப்பு மருந்துகளை வீடு வீடாகச் சென்று வழங்கி வருகின்றனர்.
குடிநீரை காய்ச்சிக் குடிக்குமாறும், வயிற்றுப் போக்கு, வாந்தி ஆகியவை ஏற்பட்டால் உடனடியாகமருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுக்குமாறும் அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர்.
மேலும் சில நாள்களுக்கு குழாய் தண்ணீரைக் குடிக்க வேண்டாம், லாரி தண்ணீரையே பயன்படுத்த வேண்டும், ஈமொய்க்கும் பண்டங்களை வாங்க வேண்டாம் என்று பொது மக்களை சுகாதரத் துறை அதிகாரிகள்கேட்டுக்கொண்டுள்ளனர்.
காலரா நோய் அறிகுறி ஏற்பட்டுள்ளவர்களை உடனடியாக தண்டையார் பேட்டை தொற்றுநோய்மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல இலவச ஆம்புலன்ஸ் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் மருத்துவக் குழுவினர் வீதி வீதியாகச் சென்று அறிகுறிகள் இருக்கிறதா என விசாரித்து,அறிகுறிகள் இருந்தால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்து வருகின்றனர்.
காலரா அவசர சிகிச்சைக்கு 25952687, 25952688, 25383611 என்ற எண்களில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications