அமைச்சரவையில் சேர மார்க்சிஸ்ட் மறுப்பு
டெல்லி:
சோனியா காந்தி தலைமையிலான காங்கிரஸ் அமைச்சரவையில் சேர மாட்டோம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சி திட்டவட்டமாக அறிவித்துவிட்டது.
மார்க்சிஸ்ட் உள்ளிட்ட பிற கட்சிகள் சேர்ந்தால் தான் நாங்கள் அமைச்சரவையில் பங்கேற்போம் என இந்தியகம்யூனிஸ்ட் கட்சியும் அறிவித்துவிட்டது.
63 எம்.பிக்களைக் கொண்ட இந்த இடதுசாரிகள், கடந்த 3 நாட்களாக அமைச்சரவையில் சேருவது குறித்து தீவிரஆலோசனைகள் நடத்தி வந்தனர். இன்றும் மார்க்சிஸ்ட் கட்சியின் கூட்டம் நடந்தது.
சோனியாவில் அமைச்சரவையில் பங்கேற்றால், எதிர்க் கட்சியாக பா.ஜ.க. மட்டுமே இருக்கும் என்பதாலும் இதுதேசிய அளவில் பா.ஜ.கவின் வளர்ச்சிக்கு உதவியாக அமைந்துவிடும் என்பதால், அதைத் தடுக்கும் வகையில்சோனியா அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு தருவது என்று மார்க்சிஸ்ட் முடிவு செய்தது.
இதையடுத்து மார்க்சிஸ்ட்டும் கூட்டணியில் சேர்ந்தால் மட்டும் அமைச்சரவையில் சேருவேம் என சிபிஐதெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications