இன்பத்தமிழனை கைது செய்ய கோரி திமுக கூட்டணியினர் ஆர்ப்பாட்டம்

Subscribe to Oneindia Tamil

சென்னை :

சிவகாசி தொகுதி மதிமுக வேட்பாளர் சிப்பிப்பாறை ரவிச்சந்திரனை துப்பாக்கியால் சுட முயன்ற அமைச்சர் இன்பத் தமிழனை கைதுசெய்யக்கோரி தமிழகமெங்கும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திமுக கூட்டணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வாக்காளர் பட்டியலில் லட்சக்கணக்கான வாக்காளர்கள் நீக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், சிப்பிப்பாறை ரவிச்சந்திரனைதுப்பாக்கியால் சுட முயன்ற அமைச்சர் இன்பத்தமிழனை கைது செய்யக்கோரியும் தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டம் நடத்த ஜனநாயகமுற்போக்குக் கூட்டணி கட்சித் தலைவர்கள் கடந்த 12ம் தேதி முடிவு செய்தனர்.

இதனையடுத்து இன்று தமிழ்நாடு முழுவதும் ஜனநாயக முற்போக்குக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள திமுக, மதிமுக, பா.ம.க.,காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்புஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

சென்னையில் நடந்த போராட்டத்தில் திமுக துணைப் பொதுச் செயலாளர் ஸ்டாலின், இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் நல்லகண்ணு, பா.ம.க.தலைவர் ஜி.கே.மணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் ஏ.செளந்தர்ராஜன், மதிமுக துணைப் பொதுச் செயலாளர் சத்யா, இந்திய யூனியன்முஸ்லீம் லீக் சார்பில் எம்.ஜெய்னுலாபுதீன், முன்னாள் எம்.எல்.ஏ. தாமரைக்கனி ஆகியோர் கலந்து கொண்டனர்.

கைது செய் கைது செய் இன்பத்தமிழனை கைது செய், நடவடிக்கை எடு நடவடிக்கை எடு இன்பத்தமிழன் மீது நடவடிக்கை எடு, கொலைவெறி பிடித்த இன்பத்தமிழனே உடனே பதவி விலகு, வாக்காளர் உரிமையை பறித்த ஜெயலலிதாவே ராஜினாமா செய் ராஜினாமாசெய் என்று கோஷங்கள் எழுப்பினார்கள்.

ஆர்ப்பாட்டத்தில் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:

வெற்றி விழா கொண்டாடிக்கொண்டாடும் நேரத்தில் நாம் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறோம். இன்பத்தமிழனைகைது செய்ய வேண்டும் என்று நான் மட்டும் சொல்லவில்லை. அவரது தந்தை தாமரைக்கனியும் கூறுகிறார். அவர் இந்தமேடையில் தான் இருக்கிறார். இன்பத்தமிழனை கைது செய்யும்வரை போராட்டம் தொடரும்.

இன்பத்தமிழன் ரவிச்சந்திரனை கொலை செய்ய முயற்சித்தார். ஆனால் முதல்வர் ஜெயலலிதா ஜனநாயகத்தையே கொலை செய்யமுயற்சிக்கிறார். தமிழகம் முழுவதும் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளார்கள்.

வாக்காளர் பட்டியலில் இருந்து பல லட்சம் பேரை நீக்கியதற்காக ஜெயலலிதா பதவி விலகவேண்டும் என்று நாங்கள்கூறுகிறோம். சோனியா காந்தி தலைமையில் அமையும் புதிய ஆட்சியினர் உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என்று நாங்கள்நம்புகிறோம் என்று பேசினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+