தமிழகத்தில் சில நாட்களில் தென் மேற்கு பருவ மழை !
சென்னை:
தமிழகத்தில் இன்னும் ஓரிரு நாட்களில் தென்மேற்கு பருவ மழையும் பெய்யத் தொடங்கிவிடும் என வானிலைஆராய்ச்சி நிலையம் கூறியுள்ளது.
தென் மேற்குப் பருவ மழை வழக்கமாக ஜூன் முதல் வாரத்தில்தான் தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு முன்கூட்டியே மழை தொடங்குவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகரித்துள்ளன.
தென் மேற்குப் பருவ மழை வருவதற்கு கட்டியம் கூறும் வகையில், தமிழகம் முழுவதும் கடந்த 3 நாட்களாகவேபரவலாக மழை பெய்து வருகிறது. சென்னை நகரில் நேற்று மாலை முதல் விடிய விடிய மழை பெய்தது.
இதேபோல போல மதுரை, திருநெல்வேலி, தஞ்சாவூர், விழுப்புரம் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும்கடும் மழை பெய்து வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் அதிக அளவாக 9 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
பருவ மழைக்கு முந்தைய இந்த மழை இன்னும் 2 நாட்களுக்கு நீடிக்கும் என வானிலை ஆராய்ச்சி நிலையம்தெரிவிக்கிறது. இதைத் தொடர்ந்து தென்மேற்கு பருவ மழையும் பெய்யத் தொடங்கிவிடும் என்று கூறியுள்ளது.