ரஜினியின் முக்கியத்துவம் முடிந்தது: அன்புமணி
திண்டிவனம்:
அரசியல் ரீதியாக நடிகர் ரஜினிகாந்த்துக்கு இருந்து வந்த முக்கியத்துவம் முடிந்து விட்டது என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர்ராமதாஸின் மகனும், கட்சியின் ஒருங்கிணைப்பு செயலாளராக புதிதாக நியமிக்கப்பட்டுள்ளவருமான டாக்டர் அன்புமணிகூறியுள்ளார்.
திண்டிவனத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தமிழக மக்களவைத் தேர்தலில் திமுக தலைமையில் அமைந்தகூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. ரஜினியின் செல்வாக்கு குறித்து பத்திரிக்கைகளில் வெளியான தகவல்களையும் மீறிஇக்கூட்டணி பெரும் வெற்றியைப் பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் ரஜினிகாந்த்திற்கு அரசியல் ரீதியாக இருந்து வந்த செல்வாக்கு முடிந்து விட்டதை புரிந்து கொள்ளமுடியும். அவர் எதிர்ப்பு தெரிவித்த 6 தொகுதிகளிலும் பா.ம.க. வேட்பாளர்கள் மிகவும் அபாரமாக வெற்றி பெற்றுள்ளனர்.
எனவே, பா.ம.க. தொண்டர்கள் ரஜினி குறித்து இனி கவலைப்பட வேண்டாம். அவரை எதிர்த்து சுவரொட்டிகள் ஒட்டுவது, ரஜினிரசிகர்களைத் தாக்குவது போன்றவற்றில் ஈடுபட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றார் அன்புமணி.