பிரதமர் பதவிக்கு சோனியாவின் பெயரை முன்மொழிந்த கருணாநிதி
டெல்லி:
டெல்லியில் நடந்த காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகளின் கூட்டத்தில், சோனியா காந்தி பிரதமராக வேண்டும் என திமுகதலைவர் கருணாநிதி முன்மொழிந்தார். இதை கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சியினரும் ஏற்றுக் கொண்டனர்.
இந்தக் கூட்டணிக்கு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி என்று பெயரிடப்பட்டுள்ளது.
சோனியாவின் இல்லத்தில் நேற்றிரவு நடந்த கூட்டத்தில் கூட்டணியில் இடம் பெறாத சமாஜ்வாடி கட்சியும்,அஜீத்சிங்கின் கட்சியும் பங்கேற்று, சோனியா பிரதமராக ஆதரவு தெரிவித்தன. பின்னர் ஜனாதிபதியிடம் இந்தக்கட்சிகள் நேரடியாக ஆதரவுக் கடிதம் தந்தன.
இக் கூட்டத்தில் பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, செஞ்சி ராமச்சந்திரன்உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். கூட்டத்துக்கு தாமதமாக வந்த வைகோவை காங்கிரஸ் மூத்ததலைவர்களான மன்மோகன் சிங்கும், கமல்நாத்தும் கட்டித் தழுவி வரவேற்று அழைத்துச் சென்றனர்.
இக் கூட்டத்திற்குப் பின் நடந்த விருந்தில் முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கும் கலந்து கொண்டார். முன்னதாகவி.பி.சிங்கை கருணாநிதி அவரது இல்லத்தில் சென்று சந்தித்துப் பேசினார். அப்போது சோனியாவின்அமைச்சரவையில் திமுக உடனடியாக சேர வேண்டும் என சிங் கோரிக்கை விடுத்தார்.
தான் வரைந்த ஓவியம் ஒன்றையும் கருணாநிதிக்கு விபி சிங் பரிசாக அளித்தார்.












Click it and Unblock the Notifications