தோற்றாலும் செல்வாக்கு குறையவில்லை: திருமாவளவன்
சென்னை:
மக்களவைத் தேர்தலில் தோல்வி அடைந்திருந்தாலும் எனது செல்வாக்கோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் செல்வாக்கோஇம்மியளவும் குறையவில்லை. மக்கள் ஆதரவு எங்களுக்கு கூடியுள்ளது என்று விடுதலைச் சிறுத்தைகள் பொதுச் செயலாளர்திருமாவளவன் கூறியுள்ளார்.
மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட மக்கள் கூட்டணி வேட்பாளர்களில் திருமாவளவன் மட்டுமே ஓரளவுக்கு ஓட்டுக்கள்பெற்றுள்ளார். போட்டியிட்ட சிதம்பரம் தொகுதியில் பாமக வேட்பாளருக்கு அடுத்து இரண்டாவது இடத்தைப் பிடித்தார்திருமாவளவன்.
பாஜக வேட்பாளரை மூன்றாவது இடத்திற்குத் தள்ளிய திருமாவளவன், 2.66 லட்சம் ஓட்டுக்களைப் பெற்றுள்ளார்.
மக்கள் கூட்டணி சார்பில் போட்டியிட்ட டாக்டர் கிருஷ்ணசாமி, எஸ்.கண்ணப்பன் ஆகியோர் 3வது இடங்களைப் பெற்றுபடுதோல்வி கண்டுள்ளனர்.
இந் நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், கடந்த தேர்தலில் பெற்றதை விட 31,000 வாக்குகள் கூடுதல்பெற்றுள்ளேன். காட்டு மன்னார்கோவில் சட்டசபைத் தொகுதியில் பாமக வேட்பாளரை விட கூடுதல் வாக்குகள் பெற்றுள்ளேன்.
திமுக கூட்டணிக்கு இம்முறை 4,000 ஓட்டுக்கள் குறைந்துள்ளன. பாமக இத்தொகுதியில் கடந்த 1989, 91, 96 ஆகியதேர்தல்களில் தனித்துப் போட்டியிட்டது. அப்போதெல்லாம் 1.5 லட்சம் ஓட்டுக்களைக் கூட பெற முடியாமல் திண்டாடியது.
அதன் பிறகு அதிமுக ஆதரவுடனும், திமுக ஆதரவுடனும் தேர்தலில் போட்டியிட்டு அவர்களின் வாக்கு வங்கி மூலம் வெற்றிபெற்று வருகிறது.
இந்தத் தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் வேட்பாளர்கள் ஒட்டு மொத்தமாக 9,37,462 வாக்குகளைப் பெற்றுள்ளனர்.
விடுதலைச் சிறுத்தைகள் அழியவில்லை, தமிழக அரசியலில் முக்கியப் பங்கு வகிக்கும் நிலையில் தொடர்ந்து உள்ளது என்பதைஇந்தத் தேர்தல் மூலம் மற்ற அரசியல் கட்சிகளுக்கு புரிய வைத்துள்ளோம் என்றார் திருமாவளவன்.