For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சென்னையில் கனமழை: குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர்மட்டம் அதிகரிப்பு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர் பிடிப்பு பகுதிகளில் கன மழை பெய்ததையடுத்து அந்த ஏரிகளுக்குநீர்வரத்து அதிகரித்துள்ளது.

புழலேரியில் 15 கோடி கன அடி அளவு நீர் இருப்பு உள்ளது. தற்போது விநாடிக்கு 5 கன அடி வீதம் நீர் வருகிறது.பூண்டியில் நீர் இருப்பு 63 லட்சம் கன அடியாகும். நீர்வரத்து விநாடிக்கு 28 கன அடியாக உள்ளது.

செம்பரம்பாக்கம், சோழவரம் ஆகிய ஏரிகளின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலும் மழை பெய்திருப்பினும், அந்தஏரிகளில் குறிப்பிட்டுச் சொல்லும்படி நீர் இருப்பு அதிகரிக்கவில்லை.

இதற்கிடையே வீராணம் ஏரியிலும் நீர்மட்டம் 9.5 அடியாக உயர்ந்துள்ளது. தொடர்ந்து பெய்து வரும் மழையால்நீர்வரத்து அதிகரித்து வருகிறது.

ஏரிகளில் நீர்வரத்து அதிகரித்திருப்பதும், தொடர்ந்து மழை பெய்வதும் சென்னை மக்களின் கொடுமையானகுடிநீர் பிரச்சனையை ஓரளவுக்குக் குறைக்கும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X