இது திமுகவுக்குக் கிடைத்த 41வது வெற்றி: கருணாநிதி
டெல்லி:
ரத்து செய்யப்பட்ட பல்வேறு சலுகைகள், பறிக்கப்பட்ட பல்வேறு உரிமைகளை மீண்டும் வழங்குவதாக முதல்வர்ஜெயலலிதா அறிவித்துள்ளது, திமுக கூட்டணிக்குக் கிடைத்துள்ள 41வது வெற்றி என கருணாநிதி கூறியுள்ளார்.
கட்டாய மதமாற்ற தடைச் சட்டத்தை நீக்குவது, பத்திரிக்கையாளர்கள் மீதான வழக்குகளை ரத்து செய்வது, அரசுஊழியர்கள் மீதான வழக்குகளை வாபஸ் பெறுவது, இலவச மின்சாரத்தை மீண்டும் வழங்குவது உள்ளிட்டபல்வேறு அறிவிப்புகளை ஜெயலலிதா இன்று அறிவித்தார்.
இது குறித்து டெல்லியில் உள்ள திமுக தலைவர் கருணாநிதி கருத்து தெரிவிக்கையில்,
புதிய அறிவிப்பு எதையும் ஜெயலலிதா வெளியிடவில்லை. ஏற்கனவே திமுக ஆட்சி காலத்தில் கொடுக்கப்பட்டசலுகைகள், உரிமைகளை கடந்த 3 ஆண்டுகளாக ஒழித்துக் கட்டி விட்டு இப்போது தேர்தலில் படு தோல்விகிடைத்த பின்னர் மீண்டும் வழங்குவதாக அறிவித்துள்ளார்.
இது கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் செய்வது போலாகும். 40 தொகுதிகளில் திமுக கூட்டணி வென்றது.ஜெயலலிதாவின் இந்த அறிவிப்புகள் திமுக கூட்டணிக்குக் கிடைத்துள்ள 41வது வெற்றியாகும்.
அடுத்த தேர்தலில் வெற்றி பெறுவதற்காக மக்களை ஏமாற்ற முயலுகிறார் ஜெயலலிதா. ஆனால் மக்கள் இனிஏமாறவே மாட்டார்கள்.
மத்திய அமைச்சரவையில் திமுக, சேராததற்கு பல காரணங்கள் உள்ளன. இருப்பினும் மூத்த தலைவர்களுடன்விவாதித்து உரிய முடிவு எடுக்கப்படும் என்றார் கருணாநிதி.