சென்னை-ராமநாதபுரத்தில் காலரா: மேலும் 134 பேர் பாதிப்பு- பலி 4 ஆனது
சென்னை:
சென்னையில் மேலும் இரண்டு பேர் காலரா நோய்க்கு பலியாகியுள்ளனர்.
சென்னையின் ஓட்டேரி, புளியந்தோப்பு, பட்டாளம் பகுதிகளில் காலரா நோய் வேகமாக பரவி வருகிறது. இன்றுமேலும் இருவர் காலரா நோய்க்கு பலியாகினர். இதனால் பலியானவர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 100 பேர் இன்று காலரா நோய் அறிகுறிகளுடன் தண்டையார்பேட்டை தொற்றுநோய் மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களில் 40 பேர் குழந்தைகள் ஆவர். சுகாதரமற்ற குடிநீரைக் குடிக்க வேண்டாம்என்று பாதிக்கப்பட்ட பகுதிகளில் துண்டுப் பிரசுரம் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
ராமநாதபுரத்திலும் காலரா:
சென்னையைத் தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டத்திலும் காலரா பரவி வருகிறது. ராமநாதபுரம் மாவட்டம்திருப்பாலைக்குடி, எஸ்.கொடிக்குளம் ஆகிய பகுதிகளில் காலரா பரவி வருகிறது.
இரு கிராமங்களையும் சேர்ந்த 34 பேர் காலராவால் பாதிக்கப்பட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட இரு கிராமங்களுக்கும் மருத்துவக் குழுக்கள் விரைந்துள்ளன. காலரா தடுப்பு நடவடிக்கைகள் துரிதகதியில் மேற்கொள்ளப்பட்டுள்ளன