செல்வ அரசி கணவர் கொலை வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்ற கோரி மனு தாக்கல்
சென்னை:
மருத்துவக் கல்லூரி மாணவி ரோஸ்லின் செல்வஅரசியின் காதல் கணவர் பிரதாப்பை மாமனாரே ஆள்வைத்துக் கடத்திக் கொலை செய்ததாகக் கூறப்படும் வழக்கை சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
செல்வ அரசியும் பிரதாப்பும் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள். இவர்களது திருமணத்துக்கு செல்வஅரசியின் தந்தை ராதாகிருஷ்ணன் எதிர்ப்பு தெரிவித்தார். இந் நிலையில் பிரதாப் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக ராதாகிருஷ்ணனின் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இதனையடுத்து ராதாகிருஷ்ணன் தலைமறைவானார். இந் நிலையில் கொலை செய்யப்பட்ட பிரதாப்பின் சகோதரர்அமிதாப், சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனுத் தாக்கல் செய்தார். அந்த மனுவில்,
இந்த வழக்கில் போலீஸார் குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்கு சாதகமாக நடந்து வருகின்றனர். எனவே, வழக்குவிசாரணையை சி.பி.சி.ஐ.டி. போலீஸார் வசம் ஒப்படைக்க வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மனு நீதிபதிபாலசுப்ரமணியன், நீதிபதி கண்ணதாசன் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
இதில் ஆஜரான அரசுத் தரப்பு வழக்கறிஞர் நவநீதகிருஷ்ணன், விசாரணை தொடர்பான போலீஸாரின்அறிக்கையைத் தாக்கல் செய்ய ஒரு வார கால அவகாசம் கோரினார். இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் வழக்குஅடுத்த வாரத்துக்கு தள்ளி வைத்தனர்.












Click it and Unblock the Notifications