கலாமை சந்திப்பதில் தாமதம்: சோனியா பிரதமராவதில் சிக்கல்?
டெல்லி:
மத்தியில் பதவியேற்க காங்கிரஸ் கட்சிக்கு குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம் நேற்றுஅழைப்பு விடுத்தார். இதையடுத்து இன்று காலை கலாமை சோனியா காந்தி சந்திக்கிறார்.
காலை 9.30 மணிக்கு நடப்பதாக இருந்த இச் சந்திப்பு திடீரென ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.இருப்பினும் இன்றே இச் சந்திப்பு நடக்கும் என காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சந்திப்பின்போது சோனியா பிரதமராக நியமிக்கப்பட்டதற்கான கடிதத்தை கலாம் வழங்குவார் என்றுதெரிகிறது.
முன்னதாக நேற்றிரவு சோனியா பிரதமராக மாட்டார் என வதந்தி பரவியது. திடீரென சோனியாவில்இல்லத்தில் நேற்றிரவு கூட்டணிக் கட்சிகளின் கூட்டம் அவசரமாகக் கூட்டப்பட்டது. அதில் திமுகதலைவர் கருணாநிதி உள்ளிட்ட அனைத்துக் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்றனர்.
அப்போது, தான் பிரதமராக சங் பரிவார் அமைப்புகள் கடும் எதிர்ப்புத் தெரிவிப்பதால் போட்டியில்இருந்து விலகிக் கொள்வதாகவும், வேறு ஒருவரை பிரதமராக்கலாம் என்றும் சோனியா கருத்துதெரிவித்தார்.
ஆனால், இதை கூட்டணிக் கட்சிகள் ஏற்கவில்லை. சங் பரிவாருக்கும் பா.ஜ.கவின்நெருக்குதலுக்கும் பணியவே கூடாது என கூறிவிட்டன. இதையடுத்தே பிரதமராக சோனியா ஒப்புக்கொண்டதாகத் தெரிகிறது.
இக் கூட்டம் முடிந்தவுடன் வெளியே வந்த மூத்த காங்கிரஸ் தலைவர் மன்மோகன் சிங், சோனியாபிரதமராக மாட்டார் என்பது வெறும் வதந்திதான். அவர் நாளை குடியரசுத் தலைவரை சந்திப்பார்.நாளை மறுதினம் பதவியேற்பார் என்று அறிவித்தார்.
இந் நிலையில் இன்று காலை 9.30 மணிக்கு கலாமை சோனியா சந்திக்க இருந்தார். ஆனால் இதுவரைஇச் சந்திப்பு நடக்கவில்லை.
இதனால் சோனியா பிரதமராவாரா என்ற கேள்வி தொடர்ந்து கொண்டுள்ளது.












Click it and Unblock the Notifications