சோனியாவை தடுத்த ராகுல்-பிரியங்கா
டெல்லி:
பிரதமர் பதவியை ஏற்பதில்லை என்ற சோனியா காந்தியின் முடிவுக்கு அவரது மகன் ராகுல்காந்தியும், மகள் பிரியங்காவும் முழு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
அவரை பிரதமர் பதவியேற்க வேண்டாம் என தடுத்ததே இந்த இருவரும் என காங்கிரஸ்வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தான் பிரதமராக விரும்பவில்லை என கட்சி எம்.பிக்கள் மத்தியில் சோனியா அறிவித்தபோதுராகுலும் பிரியங்காவும் அங்கிருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல், என் தாயாரின் இந்த முடிவு எதிர்பார்த்தது தான். கடந்த6 ஆண்டுகளாகவே அவர் இதைத் தான் மனதில் நினைத்து வந்தார். இப்போது கட்சி ஆட்சிக்குவந்தாலும் அவர் தனது மனதை மாற்றிக் கொள்ளவிலலை. அவரது இந்த அறிவிப்பைமனப்பூர்வமாக வரவேற்கிறேன் என்றார்.
பிரியங்கா கூறுகையில், தன் உள் மனதும் மனசாட்சியும் சொன்னபடி நடந்து கொண்டதாக என்தாயார் கூறியிருக்கிறார்.
அவர் தன் உயிருக்குப் பயந்து இந்த முடிவை எடுத்துள்ளதாக சிலர் கூறியிருக்கிறார்கள். அவர்எதற்கும் பயப்படுகிற, கலங்குற ரகம் அல்ல. பிரதமர் என்ற பதவியில் இருந்தால் இப்போதுஇருப்பதை விட அதிக பாதுகாப்புடன் தான் அவர் இருப்பார்.
மனசாட்சி, உண்மையின் மீது நம்பிக்கை வைத்து முடிவெடுத்திருக்கிறார். அவரது முடிவு சரியானதேஎன்றார்.
முன்னதாகப் பேசிய சோனியா, மதவாத சக்திகளுடனான சண்டை தான் முடிவுக்கு வந்திருக்கிறது.அதில் நாம் வென்றிருக்கிறோம். ஆனால், போர் இன்னும் முடியவில்லை. மதவாத சக்திகளுக்குஎதிரான போரில் நான் காங்கிரசை முன்னின்று நடத்திச் செல்வேன். என்னை நம்புங்கள், கட்சியைநான் கைவிட மாட்டேன் என்றார்.