தமிழகத்தில் தென்மேற்கு பருவ மழை தொடங்கியது
நாகர்கோவில்:
தமிழகத்தில் தென்மேற்கு பருவ மழை தொடங்கியுள்ளது. கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் அடுத்தஇரண்டு நாட்களுக்கு கன மழை பெய்யும் என வானிலை ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு தென் மேற்கு பருவ மழை முன் கூட்டியே தொடங்கியுள்ளது. வழக்கமாக ஜூன் முதல் வாரத்தில்தான் பருவ மழைதொடங்கும். தமிழகத்தில் கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் நேற்று முதல் கன மழை பெய்துவருகிறது. இந்த மழை மேலும் 2 நாட்களுக்கு நீடிக்கும் என்று வானிலை ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.
இதேபோல, கேரளாவிலும் தென் மேற்கு பருவ மழை தொடங்கியது. அங்கும் கன மழை பெய்து வருகிறது. குமரி மாவட்டத்தில்அதிகபட்சமாக சுருளியோடு, சிற்றார் ஆகிய இடங்களில் 80 மில்லிமீட்டரும், குறைந்தபட்சமாக நாகர்கோவிலில் 39 மில்லிமீட்டர்மழையும் பதிவாகியுள்ளது.
கன மழை காரணமாக மாவட்டங்களில் உள்ள அணைகளில் நீர்வரத்து அதிகரித்து நீர் மட்டம் உயரத் தொடங்கியுள்ளது.












Click it and Unblock the Notifications