வரும் 24ம் தேதி மதுரை உயர் நீதிமன்ற கிளை திறப்பு: சுபாஷன் ரெட்டி
மதுரை:
மதுரையில் அமைக்கப்பட்டுள்ள சென்னை உயர் நீதிமன்றக் கிளை வருகிற 24ம் தேதி திறக்கப்படும் என்று தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி கூறியுள்ளார்.
மதுரையில் ரூ. 32 கோடி மதிப்பில் உயர் நீதிமன்றக் கிளை அமைக்கப்பட்டுள்ளது. செயல்பாட்டுக்குத் தயார்நிலையில் உள்ள கிளை இன்று திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந் நிலையில் சுபாஷன் ரெட்டி இன்று மதுரை சென்று உயர் நீதிமன்றக் கிளையை பார்வையிட்டார். பின்னர் அவர்செய்தியாளர்களிடம் பேசுகையில், குடியரசுத் தலைவரின் ஒப்புதல் இன்னும் கிடைக்கவில்லை.
எனவே திறப்பு விழா வருகிற 24ம் தேதிக்குத் தள்ளி வைக்கப்படுகிறது. அதற்குள் குடியரசுத் தலைவரின் ஒப்புதல்மற்றும் அறிவிக்கை வெளியாகி விடும்.
உயர் நீதிமன்றக் கிளை திறக்கப்பட்டவுடன் சுமார் 24,000 வழக்குகள் மதுரைக்கு மாற்றப்படும். ரிட் மனுக்களைவிசாரிக்கும் அதிகாரம் வழங்குவது குறித்து பின்னர் முடிவு செய்யப்படும் என்றார்.