For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் சுஷ்மா, உமா பாரதி கொடும்பாவிகள் எரிப்பு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னையிலும் திருச்சியிலும் பாஜக தலைவர் சுஷ்மா சுவராஜ், மத்தியப் பிரதேச முதல்வர் உமா பாரதியின் கொடும்பாவிகளை எரித்து காங்கிரஸார் போராட்டம் நடத்தினர்.

சோனியா காந்தி பிரதமரானால் தனது எம்.பி பதவியை ராஜினாமா செய்யப் போவதாகவும், மொட்டை போட்டுக்கொள்ளப் போவதாகவும் சுஷ்மா சுவராஜ் அறிவித்துள்ளார். அதே போல உமா பாரதி தனது முதல்வர் பதவியைராஜினாமா செய்து கடிதத்தை கட்சித் தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு அனுப்பியுள்ளார்.

இதையடுத்து பா.ஜ.கவை எதிர்த்து தமிழகத்தில் காங்கிரஸார் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

சென்னையில் காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவன் வளாகத்தில் இன்று காங்கிரஸார் சுஷ்மாசுவராஜின் கொடும்பாவியை எரித்துப் போராட்டம் நடத்தினர்.

இதேபோல சைதாப்பேட்டை பகுதியிலும் காங்கிரஸ் தொண்டர்கள் கொடும்பாவி எரிப்பில் ஈடுபட்டனர்.சோனியாவைத் தவிர வேறு யாரையும் பிரதமராக ஏற்க மாட்டோம் என்றும் அவர்கள் கோஷமிட்டனர்.

இதற்கிடையே, சோனியா காந்தி பிரதமர் ஆவதையே தமிழக காங்கிரஸ் கட்சி விரும்பவதாக தமிழக காங்கிரஸ்தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார். செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,

இந்தக் கோக்கையை வலியுறுத்தி தமிழக காங்கிரஸ் கட்சி தீர்மானம் நிறைவேற்றியுள்ளதாகக் கூறினார்.

திருச்சியில் உமா பாரதியின் கொடும்பாவியை காங்கிரசார் எரித்தனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X