கோவையில் போதிய மழை இருக்காது: வேளாண் பல்கலை.
Subscribe to Oneindia Tamil
கோவை:
கோவை, நீலகிரியில் சில இடங்களில் இந்த ஆண்டு போதுமான மழைப் பொழிவு இருக்காது என்று தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் வானிலை ஆராய்ச்சி மையம் கூறியுள்ளது.
இதுதொடர்பாக மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென் மேற்குப் பருவ மழை தமிழகத்தில்தொடங்கியுள்ளது. இருப்பினும் இந்த மழையால் கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களுக்கு பெரிய அளவில்பலன் இருக்காது.
உடுமலைப்பேட்டை, பல்லடம், நீலகிரி ஆகிய பகுதிகளில் போதிய மழைப் பொழிவு இருக்காது. இங்கு குறைவானமழைப் பொழிவே பதிவாகும்.
சென்னையப் பொருத்தவரை நல்ல மழைப் பொழிவு இருக்கும். இங்கு இந்த பருவ காலத்தில் 410 மில்லிமீட்டர்மழை அளவுக்கு பொழிவு இருக்கும்.
மதுரை மாவட்டத்திலும் நல்ல மழைப் பொழிவு இருக்கும் என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications