ஓடும் காரில் 100 பவுன் நகை கொள்ளை

Subscribe to Oneindia Tamil

கடலூர்:

கடலூர் அருகே ஓடும் காரில் ஏறிய 3 கொள்ளையர்கள், அதில் பயணித்தவர்களிடம் 100 பவுன் நகைகைள பறித்துக் கொண்டு காருடன் தப்பினர்.

புதுவையைச் சேர்ந்தவர் கைலாசம். தொழிலதிபரான இவர் தனது குடும்பத்தாருடன் காரில், வைத்தீஸ்வரன்கோவில் சென்று சாமி கும்பிட்டார். பின்னர் ஊர் திரும்பிக் கொண்டிருந்தார்.

கடலூர் அருகே கொள்ளிடம் அருகே கார் வந்தபோது 3 பேர் காரை வழிமறித்து நிறுத்தினர். தங்களை போலீஸார்என்று கூறிக் கொண்ட அவர்கள், சிறிது தூரத்தில் உள்ள காவல் நிலையத்தில் இறக்கி விட்டு விடுமாறுகேட்டுள்ளனர்.

இதையடுத்து அவர்களை காரில் ஏற்றிக் கொண்டார் கைலாசம். ஆனால் கார் புறப்பட்டவுடன், 3 பேரும் மறைத்துவைத்திருந்த கத்திகளை எடுத்து கைலாசம் உள்ளிட்டவர்களை மிரட்டத் தொடங்கினர்.

பின்னர் காரில் இருந்த பெண்கள் அணிந்திருந்த நகைகளை பறித்துக் கொண்டனர். பின்னர் ஒவ்வொருவரையும்ஆங்காங்கே இறக்கி விட்டனர். அதன் பின்னர் காருடன் தப்பி விட்டனர்.

கொள்ளையர்கள் பறித்துச் சென்ற நகைகள் 100 பவுன் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாகபோலீஸில் புகார் தரப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+