திமுகவின் வெற்றிக்காக கையை "தியாகம்" செய்த தொண்டர்!!
வேலூர்:
அதிமுகவில் மட்டும்தான் மூட நம்பிக்கை கொண்ட, முரட்டுத் தொண்டர்கள் இருப்பார்கள் என்பதை பொய்யாக்கியுள்ளார் திமுகவைச் சேர்ந்த தொண்டர் ஒருவர்.
மக்களவைத் தேர்தலில் அதிமுக ஜெயிக்க வேண்டும் என்பதற்காக காவலர் ஒருவர் தனது கைவிரல்களை வெட்டிக்கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதேபோல பெண் அதிமுக தொண்டர் ஒருவர் தனது ரத்தத்தால்அம்மனுக்கு அபிஷேகம் செய்தார்.
இந்த நிலையில் திமுகவைச் சேர்ந்த ஒரு தொண்டர், அதிமுக தொண்டர்களுக்கு இணையாக ஒரு தியாகத்தைசெய்துள்ளார்.
வேலூர் மாவட்டம் கோவில் மடிங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகம், தீவிர திமுக தொண்டர்.
மக்களவைத் தேர்தலில் திமுக அபார வெற்றி பெற வேண்டும். அப்படி வெற்றி பெற்றால், பர்வதமலை வனப்பகுதியில் உள்ள வன துர்க்கை கோவிலில் தனது கையை தானமாக கொடுப்பதாக இவர் வேண்டியிருந்தாராம்.
அவர் விரும்பியபடியே திமுக பெரும் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து கோவிலுக்குச் சென்ற சண்முகம், தனதுஇடது கையை வெட்டிக் கொண்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கையை வெட்டிக் கொண்ட சண்முகம் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.