கருணாநிதி பிறந்த நாள்: சிறப்பாக கொண்டாட திமுக முடிவு
சென்னை:
திமுக தலைவர் கருணாநிதியின் 81வது பிறந்த நாளை இதுவரை இல்லாத அளவுக்கு விமரிசையாக கொண்டாட திமுகவினர் முடிவு செய்துள்ளனர்.
திமுக தலைவர் கருணாநிதி கடந்த 2 ஆண்டுகளாக தனது பிறந்த நாளை கொண்டாடவில்லை. காவிரிப் பிரச்சினைகாரணமாக பிறந்த நாள் கொண்டாட்டங்கள் வேண்டாம் என அவர் உத்தரவிட்டிருந்தார்.
இந் நிலையில், மக்களவைத் தேர்தலில் திமுக மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. இதையடுத்து வருகிற ஜூன்3ம் தேதி கருணாநிதியின் 81வது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட திமுகவினர் முடிவு செய்துள்ளனர். இதற்கானஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
இதற்கிடையே திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மாநிலம் முழுவதிலும்கருணாநிதியின் பிறந்த நாளன்று கட்சிக் கொடியேற்றுதல், பொதுக்கூட்டங்கள், ரத்ததான முகாம்கள்ஆகியவற்றிற்கு ஏற்பாடு செய்யுமாறு கோரியுள்ளார்.
மேலும், மன்மோகன் சிங் பிரதரமானதில் கருணாநிதிக்கு மிகப் பெரிய பங்குண்டு என்றும் கூறியுள்ளார்.