மதுரை விமானங்களை கடத்தப் போவதாக மிரட்டல்; போலீஸ் குவிப்பு
மதுரை:
மதுரையிலிருந்து மும்பை மற்றும் சென்னைக்கு செல்லவுள்ள விமானங்களை கடத்தப் போவதாக வந்த தகவலையடுத்து மதுரை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு இன்று காலை தொலைபேசி அழைப்பு வந்தது.அதில் பேசிய நபர், மதுரையிலிருந்து மும்பை செல்லும் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம், சென்னை செல்லும் ஜெட்ஏர்வேஸ் விமானங்கள் கடத்தப்படவுள்ளதாக தெரிவித்தார்.
இதையடுத்து மதுரை விமான நிலையம் உஷார்படுத்தப்பட்டது. அதிரடிப்படை காவலர்கள் விமான நிலையத்திற்குவிரைந்தனர். விமான நிலையத்திற்கு வந்த பயணிகள், அவர்களை வழியனுப்ப வந்தவர்கள் உள்ளிட்டஅனைவரையும் போலீஸார் முழுமையாக சோதனை செய்தனர்.
மேலும் விமான நிலையத்தில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்தும் சோதனை நடத்தப்பட்டது.விமானங்களை கடத்தப் போவதாக வந்த தகவலையடுத்து விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications