29ம் தேதி எம்பிஏ, எம்சிஏ நுழைவுத் தேர்வு
சென்னை:
எம்பிஏ, எம்சிஏ, எம்இ., எம்.ஆர்க். ஆகிய முதுநிலைப் படிப்புகளுக்கு வரும் 29, 30 தேதிகளில் நுழைவுத் தேர்வு நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
இது குறித்து அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தர் பாலகுருசாமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
29ம் தேதி காலை எம்.பி.ஏ, பிற்பகலில் எம்.சி.ஏ, 30ம் தேதி காலை எம்.ஆர்க்., எம்.பிளான் ஆகிய படிப்புகளுக்குநுழைவுத் தேர்வு நடத்தப்படும்.
இது தொடர்பாக தகவல் பெற விரும்புவோருக்காக அண்ணா பல்கலைக்கழகம், திருச்சி- தேசிய தொழில் நுட்பமையம், மதுரை- தியாகராஜர் பொறியியல் கல்லூரி, சேலம்- அரசு பொறியியல் கல்லூரி, கோயம்புத்தூர் அரசுதொழில்நுட்பக் கல்லூரி, திருநெல்வேலி- அரசு பொறியியல் கல்லூரி ஆகிய இடங்களில் விசாரணை அலுவலங்கள்அமைக்கப்படும்.
இந்த விசாரணை அலுவலகங்கள் வருகிற 28-ந் தேதி காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை செயல்படும்.
ஹால் டிக்கெட் கிடைக்கப் பெறாதவர்கள் விசாரணை அலுவலகங்களுக்கு தாங்கள் கடைசியாக படித்த கல்விநிறுவன துறைத் தலைவரின் சான்றிதழ், நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பித்ததற்கான ஆதாரத்துடன் தொடர்புகொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.