ஈ.கே. நாயனார் மறைவு: தலைவர்கள் இரங்கல்
சென்னை:
கேரள முன்னாள் முதல்வர் ஈ.கே.நாயனாரின் மறைவுக்கு திமுக தலைவர் கருணாநிதி இரங்கல் தெரிவித்துள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மிக முக்கியத் தலைவர்களில் ஒருவரான நாயனார் சில காலமாகஉடல் நலமின்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சை பலனின்றி நேற்றுகாலமானார்.
இது குறித்து கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், நாயனார் என்னுடன் சிறந்த நட்பைக் கொண்டிருந்தவர்.கேரள மாநில முன்னேற்றத்திற்காக அவர் மேற்கொண்ட முயற்சிகள் ஏராளம் என்று கூறியுள்ளார் கருணாநிதி.
இதேபோல மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர் வரதராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழகத்தில்இடதுசாரி இயக்க வளர்ச்சியில் நாயனார் மிகவும் ஆர்வம் காட்டினார் என்று கூறியுள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் நல்லகண்ணு, திராவிட இயக்க பொதுச் செயலாளர் கி.வீரமணி ஆகியோரும்நாயனார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications