சென்னையில் தண்ணீர் ரயில் தடம் புரண்டது
சென்னை:
செங்கல்பட்டில் இருந்து சென்னை ரயில்வே குடியிருப்புகளுக்கு தண்ணீர் கொண்டு வரும் ரயில் குரோம்பேட்டை அருகே தடம்புரண்டு கவிழ்ந்தது.
எழும்பூரில் உள்ள ரெயில்வே குடியிருப்புகளுக்கு செங்கல்பட்டில் இருந்து ரெயில் மூலம் தினமும் தண்ணீர்கொண்டுவரப்படுகிறது. இன்று காலை தண்ணீர் கொண்டுவர 8 வேகன்கள் அடங்கிய ரெயில் செங்கல்பட்டுக்குச் சென்றுகொண்டிருந்தது.
குரோம்பேட்டை எம்.ஐ.டி. கேட் அருகில் ரெயில் வந்தபோது. ரெயிலின் கடைசி வேகன் தடம் புரண்டு பக்கவாட்டில் கவிழ்ந்துவிழுந்தது. இதில் யாருக்கும் காயம் இல்லை. விபத்து குறித்து தகவல் தெரிந்ததும், தாம்பரம் ரெயில்வே போலீஸார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்றனர்.
இந்த விபத்தால் சென்னை கடற்கரை- - தாம்பரம் இடையே அகல ரெயில் பாதை போக்குவரத்து சிறிது நேரம் நிறுத்தப்பட்டது.மீட்பு பணி முடிந்ததும் ரெயில்கள் மீண்டும் அந்தப் பாதையில் இயங்கின.