சோனியாவுக்காக கோவை சிறையில் அல்-உம்மா கைதிகள் உண்ணாவிரதம்

Subscribe to Oneindia Tamil

கோவை:

சோனியா காந்தி பிரதமராக வேண்டும் என்று வலியுறுத்தி கோவை மத்திய சிறையில் 18 அல்-உம்மா கைதிகள்நேற்று உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.

குண்டுவெடிப்பு வழக்குகளில் கைதான அல்-உம்மா கைதிகள் கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.இவர்களில் முகம்மது முத்து, அஷ்ரப் அலி, சுபைர் நவாப் கான், ஹக்கீம், அப்பாஸ், சித்திக் அலி,

இப்ராகிம், சிக்கந்தர், அபுசலி, சையத் பக்ருதீன், நெளஷத், அலி, சம்சுதின், ரஹ்மான், வீடியோ ரபீக் உள்ளிட்ட 18கைதிகள் நேற்று காலை 6 மணி முதல் மாலை வரை உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.

சோனியா காந்திதான் பிரதமராக வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த போராட்டத்தை நடத்தியதாக பின்னர்அவர்கள் தெரிவித்தனர். உடல் நலக்குறைவு காரணமாக அமைப்பின் தலைவர் பாஷா உண்ணாவிரதத்தில் கலந்துகொள்ளவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

முஸ்லிம் கைதிகளை விடுவிக்க கோரிக்கை:

தவறாக வழிநடத்திச் செல்லப்பட்டு பல ஆண்டுகளாகச் சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் முஸ்லிம்இளைஞர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஆற்காடு இளவரசர் நவாப் முகமதுஅப்துல் அலி கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கட்டாய மதமாற்றத் தடை சட்டத்தை தமிழக அரசு வாபஸ் பெற்றதற்கு சிறுபான்மையின மக்களிடம் பெரும்ஆதரவு கிடைத்துள்ளது.

பொருளாதாரரீதியில் பின்தங்கியுள்ள முஸ்லிம் மக்களுக்கு கல்வி மற்றும் அரசுப் பணிகளில் இடஒதுக்கீடு அளிக்கவேண்டும். இதன் மூலம் அவர்களுடைய வறுமையை போக்க முடியும்.

தவறாக வழிநடத்திச் செல்லப்பட்ட முஸ்லிம் இளைஞர்கள் பலர் தமிழகத்தில் 5 முதல் 10 ஆண்டுகளாகச் சிறைவாசம் அனுபவித்து வருகிறார்கள். தங்கள் தவறுகளை உணர்ந்திருக்கும் அவர்களை விடுதலை செய்ய ஜெயலலிதாநடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் இந்து -முஸ்லிம் மக்களிடையே நல்லுறவை வளர்க்க முடியும் எனஅவர் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+