சோனியாவின் ஸ்ரீபெரும்புதூர் பயணம் ரத்து
டெல்லி:
ராஜிவ் காந்தியின் 13வது மறைவு தினத்தையொட்டி சோனியா காந்தியும் பிரதமர்பதவியேற்கவுள்ள மன்மோகன் சிங்கும் இன்று ஸ்ரீபெரும்புதூருக்கு மேற்கொள்ளவிருந்த பயணம்ரத்து செய்யப்பட்டுவிட்டது.
டெல்லியில் உள்ள ராஜிவ் நினைவிடமான வீர் பூமியில் இன்று காலை சோனியா, ராகுல், பிரியங்காமன்மோகன் சிங் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். சிங்குடன் அவரது மனைவி குர்ஷரண்கெளரும் வந்திருந்தார்.
ஜனாதிபதி கலாமின் சார்பில் இந்த நினைவிடத்தில் மலர் வளையம் வைக்கப்பட்டது.
ஸ்ரீபெரும்புதூர் நினைவிடத்தில் தமிழக காங்கிரஸ் பொருளாளர் சுதர்தனம் தலைமையில் காங்கிரசார்மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அனைத்து மத பிரார்தனையும் நடந்தது.
நிகழ்ச்சியையொட்டி பெங்களூரில் இருந்து ராஜிவ் நினைவு ஜோதி ஊர்வலமாக எடுத்துவரப்பட்டது.
நினைவிடத்தில், தமிழக காங்கிரசின் மருத்துவப் பிரிவுத் தலைவர் டாக்டர் ஆப்ரஹாம் தலைமையில்பொது மக்களுக்கு இலவச மருத்துவ முகாம் நடந்தது. இதனை பெரியகுளம் தொகுதி காங்கிரஸ்எம்.பியான ஜே.எம்.ஆரூண் துவக்கி வைத்தார்.
மத்திய செய்தி-ஒளிபரப்புத்துறையின் சார்பில் ராஜிவ் நினைவு புகைப்படக் கண்காட்சிக்கும் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.
இந் நிலையில் இன்று பிற்பகலில் ராகுல், பிரியங்கா ஸ்ரீபெரும்புதூர் வருகின்றனர்.












Click it and Unblock the Notifications