தமிழக மீனவர்களை கடத்திய லட்சத்தீவு மீனவர்கள்
Subscribe to Oneindia Tamil
நாகர்கோவில்:
கன்னியாகுமரி மாவட்டம் சின்னத்துரை கிராமத்தைச் சேர்ந்த 19 மீனவர்களை, லட்சத்தீவுகளைச் சேர்ந்தமீனவர்கள் கடத்திச் சென்று விட்டனர்.
சின்னத்துரை கிராம மீனவர்கள் மே 12ம் தேதி சைட்டஸ் என்பவருக்குச் சொந்தமான படகில் மீன் பிடிக்கச்சென்றனர். கேரளாவுக்கு அருகே அவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, படகு திசை மாறி லட்சத் தீவுகள்நோக்கி நகரத் தொடங்கியது.
இதைப் பார்த்த லட்சத்தீவு மீனவர்கள், தமிழக மீனவர்களை சிறை பிடித்து லட்சத் தீவுகளுக்கு கொண்டு சென்றுவிட்டனர். சின்னத்துறை மீனவர்களை மீட்டுத் தருமாறு கோரி சைட்டஸ் நித்திரவிளை காவல் நிலையத்தில் புகார்கொடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications