மருது சகோதரர்கள் நினைவு தபால் தலை: மத்திய அரசு ஒப்புதல்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சிவகங்கையை மையமாக வைத்து அரசாண்டு, ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போராடி உயிர் நீத்த மருது சகோதரர்கள் என்றுஅழைக்கப்படும் சின்ன மருது, பெரிய மருது ஆகியோருக்கு மத்திய அரசு விரைவில் நினைவு தபால் தலையைவெளியிடவுள்ளது.
இது குறித்து தமிழக அரசின் செய்திக் குறிப்பில்,
சிவகங்கைச் சீமையை ஆண்டு வந்த மருது சகோதரர்களுக்கு நினைவு தபால் தலை வெளியிட வேண்டும் என்று மத்திய அரசுக்குதமிழக அரசு கோரிக்கை விடுத்திருந்தது.
இதுதொடர்பாக தல்வர் ஜெயலலிதா, பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தார்.
இந்தக் கோரிக்கையை ஏற்ற மத்திய அரசு, மருது சகோதரர்களுக்கு தபால் தலை வெளியிட ஒப்புதல் அளித்துள்ளது என்றுகூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications