ராஜீவ் நினைவு நாள்: மாநகராட்சியில் தனித்தனியே அனுசரித்த திமுக, அதிமுக
சென்னை:
சென்னை மாநகராட்சியின் சார்பில் நடந்த ராஜீவ் காந்தி நினைவு நாள் பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியைதிமுக கவுன்சிலர்கள் புறக்கணித்தனர். தனியாக அவர்கள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியை நடத்தினர்.
சென்னை மாநகராட்சி கூட்டத்தில் திமுக தலைவர் கருணாநிதிக்கு எதிராக துணை மேயர் கராத்தே தியாகராஜன் கொண்டு வந்ததீர்மானத்திற்கு திமுக, காங்கிரஸ், பாமக, மதிமுக கவுன்சிலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் ஏற்பட்ட அமளியையடுத்து, எதிர்க்கட்சி கவுன்சிலர்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டர்.
பின்னர் மாநகராட்சி சார்பில் பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. இதை திமுக, காங்கிரஸ் உள்ளிட்டகவுன்சிலர்கள் புறக்கணித்தனர். அதிமுக கவுன்சிலர்கள் மட்டும் உறுதிமொழி ஏற்றனர்.
பின்னர் திமுக மாநகராட்சி தலைவர் சி.வி.மலையன் தலைமையில் தனியாக உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. அதில்காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications