பிரதமராக பதவியேற்றார் மன்மோகன் சிங்: தமிழகத்துக்கு 12 அமைச்சர்கள்
டெல்லி:
இந்தியாவின் 14வது பிரதமராக டாக்டர் மன்மோகன் சிங் இன்று பதவியேற்றார். அவருடன் 67 பேர் கொண்டஅமைச்சரவையும் பதவியேற்றது. இதில் 12 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்.
ராஷ்ட்ரபதி பவனில் இன்று மாலை நடந்த நிகழ்ச்சியில் சிங்குக்கும் அமைச்சர்களுக்கும் ஜனாதிபதி அப்துல் கலாம்பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.
இந் நிகழ்ச்சியில் முன்னாள் ஜனாதிபதி கே.ஆர். நாராயணன், பிரதமர் பதவியில் இருந்து விலகிச் செல்லும்வாஜ்பாய், முன்னாள் பிரதமர்கள் வி.பி.சிங், சந்திரசேகர், குஜ்ரால், நரசிம்மராவ், தேவ கெளடா ஆகியோரும்கலந்து கொண்டனர்.
துணைப் பிரதமர் அத்வானியும் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அவருக்கு அருகே திமுக தலைவர் கருணாநிதிஅமர்ந்திருந்தார்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா மற்றும் கூட்டணிக் கட்சிகளின் அனைத்துத்தலைவர்களும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
வழக்கமான தனது எளிய பைஜாமா, குர்தா, நீலக்கலர் டர்பனுடன் ஆங்கிலத்தில் தனது பிரமாண உறுதிமொழியைப்படித்து பதவி ஏற்றுக் கொண்டார் மன்மோகன் சிங்.